Saturday, December 24, 2011

பதில் சொல்வார் யாரோ....?

மறக்க தான் நினைக்கின்றேன்...
இருந்தும் உன் நினைவுகள் என்னை விடுவதாக இல்லை...
துரத்தி கொண்டே இருக்கின்றது என்னை விடாது...
உன்னை எண்ணி என்னை நினைக்கையில்...
விம்மி அழ முடியவில்லை...
ஏனெனில் பக்கத்தில் உறவுகள்...
பொத்திக்கொள்கிறேன் நெஞ்சை...
யாருக்கும் புரியவில்லை...
காதலின் வலி என்னவென்று...
காதலுக்கும் எனக்கும் நீண்ட இடைவெளி என்றும் தெரிந்தும்...
உன்னை இழக்க என் மனம் தயாராக இல்லை...
இருந்தும் ஏற்பதாக நானும் இல்லை...
யாரிடம் சொல்ல மன வேதனையை...
இது என்ன வாழ்க்கை என்று நாளும் நான் நடத்தும் போராட்டம்...
பதில் சொல்வார் யாரோ....?

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates