நீ என் சொந்தமென்று தோன்றிய எண்ணங்கள் யாவும் அர்த்தம் இழக்கின்றன பல ஆண்டுகளாய் உள்நெஞ்சம் சேகரித்த எண்ணற்ற வார்த்தைகளுள் ஒன்று கூட உதவிக்கு வரவில்லை மொழியையும் மறந்து இமைக்கவும் மறந்து உன்னுடன் மௌனமாய் நடக்கிறேன் நீ என் கைகோர்த்து செல்லும் அந்த நாளை எண்ணியபடி!!
என் கண்கள் சிந்தியமழை பொய்யாய் போகுதடி நேற்று பெய்த மழையின் போது இடிமுழக்கம் அண்ணாந்து பார்த்தேன் ஒவ்வெரு தடவை மின்னல் வரும் போதும் உன்கண்ணில் என்னை விழுத்திய ஞாபகமே... !!!
அழகிய தீயே.....
பற்றிக்கொண்டுவிட்டாய்
இனி ஏன் பதறுகின்றாய்
பாதி கருக்கி
மீதி விட்டுவிடாதே
முழவதையும் அழித்துவிடு
எச்சம் உண்டெனில் அது
என்றும் உன்னையே எண்ணும்...