Saturday, December 31, 2011

என் வசமில்லாததால்!!!


கனவுகள் கலைக்கவில்லை
உன் விழி இல்லாததால்
காதலை உரைக்கவில்லை
உன் மொழி இல்லாததால்
கற்பனை விதைக்கவில்லை
உன் கண் இல்லாததால்
காவியம் படைக்கவில்லை
உன் எழில் இல்லாததால்
சிந்தனை சிதைக்கவில்லை
உன் வனப்பில்லாததால்
நான் நானாகவில்லை
உன் காதல் என்வசமில்லாததால்!!!

நீயே!!!..நீயே..


என் வாழ்வும் வாழ்க்கையும் நீயே
என் வாழ்வின் இன்பமும் நீயே
என் இமையின் இமைப்பும் நீயே
என் இதயத்தின் இசையும் நீயே
என் காதலின் கதையும் நீயே
என்னை காதல் செய்தவளும்
என்னவளே நீயே தானடி !!!

Thursday, December 29, 2011

நினைவுப் பாசிகள்‌!..


அன்று உன்
பார்வை அலைகளால்
என்னை அடித்தாய்!
இன்று என்
இதயப் பாறையில்
நினைவுப் பாசிகள்‌
உன்னாலே!!!

Saturday, December 24, 2011

இறுகிப்போன உன்னிதயத்தில்......♥♥♥♥♥♥


இறுகிப்போன உன்னிதயத்தில்
எங்கே தேட நான் என்னை?
அது ஒரு காலம்
மனதும் மனதும்
சங்கமித்தது!
தம் ஸ்ரத்துக்கு

அழகாய் விடிந்தது அன்று

ஒவ்வெரு விடியலும்!
அழகாய் ஏமாறுது இன்று
காயப்பட்ட என்னிதயம்!

காயப்பட்டிருக்கென்று நீ

அறியாமல் இல்லை
ஏனோ ஆறா புண்மேல்
முள்ளை வீசுகின்றாய்?
♥♥♥♥♥♥

பதில் சொல்வார் யாரோ....?

மறக்க தான் நினைக்கின்றேன்...
இருந்தும் உன் நினைவுகள் என்னை விடுவதாக இல்லை...
துரத்தி கொண்டே இருக்கின்றது என்னை விடாது...
உன்னை எண்ணி என்னை நினைக்கையில்...
விம்மி அழ முடியவில்லை...
ஏனெனில் பக்கத்தில் உறவுகள்...
பொத்திக்கொள்கிறேன் நெஞ்சை...
யாருக்கும் புரியவில்லை...
காதலின் வலி என்னவென்று...
காதலுக்கும் எனக்கும் நீண்ட இடைவெளி என்றும் தெரிந்தும்...
உன்னை இழக்க என் மனம் தயாராக இல்லை...
இருந்தும் ஏற்பதாக நானும் இல்லை...
யாரிடம் சொல்ல மன வேதனையை...
இது என்ன வாழ்க்கை என்று நாளும் நான் நடத்தும் போராட்டம்...
பதில் சொல்வார் யாரோ....?

Friday, December 23, 2011

என் சுவாசமாய் உன் வாசம்!!!


என் நந்தவனத்தில் மலர்ந்த மல்லிகையே......
நீ தழுவிய என்னில் சுவாசமாய் உன் வாசம்!!!

உன்னில் கரைந்துவிட!


 இணைந்து விட்ட உயிர்கள் நாம்!
இதுநமக்கு உடற்பிரிவே!!!என்னைப்புரிந்

த நீயே
எனக்கு
புதிராகிப்போனாய்......
எண்ணற்ற சிந்தனையை-மன
எண்ணத்தில் தீட்டி???உன் முகம் காணாத
ஏக்கத்தில் - ஊன் இன்றி!
உறக்கம் இன்றி! உயிரற்ற
நிலையில்... உருகிப் போய்
கிடக்கின்றேன்......! உன்னில் கரைந்துவிட!

நீ எங்கே? நீ எங்கே...?


உன்னை தானே
கண்கள் இரண்டும்
தேடி பார்கிறது
உன்னை பாட ராகம் என்னை
கேள்வி கேட்கிது
நீ எங்கே? நீ எங்கே...?

Friday, December 9, 2011

என்னவளே!!!!!!!

என்னவளே! உனக்காய் உயிர்க்கவே
ஆசைப்படுகின்றேன்!
உயிர்விட்டு போவதாயினும்
உனக்காய் உயிர்விட்டு போகவே
ஆசைப்படுகின்றேன்! உன்னாலே உயிர் பெற்றேன்
உன்னாலே உணர்வுகளை சுவாசிக்கின்றேன் என்னவளே....

என் இதயம் ♥ ♥ ♥


 என் இதயம்
உன்னை பார்த்த போது தான்
என் இதயம்
காதல் உணர்வை அறிந்து கொண்டது
உன்னோடு பேசிய போது தான்
உன் நினைவுகளை
என் இதயம்
கவிதை வார்த்தைகளால்
எழுதிக்கொண்டது......

உன் இதழ் மூடுமா????


புதுப்பாதை தனைக்காண
மனம் நாடுதே...
உண்மை புரியாமல்
வெட்கம் வந்து திரை போடுதே...
மகிழ்வோடு வரும் காதல்
வண்டின் மனம் நோக
மலரே உன் இதழ் மூடுமா... !!!?

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates