கனவுகள் கலைக்கவில்லை
உன் விழி இல்லாததால்
காதலை உரைக்கவில்லை
உன் மொழி இல்லாததால்
கற்பனை விதைக்கவில்லை
உன் கண் இல்லாததால்
காவியம் படைக்கவில்லை
உன் எழில் இல்லாததால்
சிந்தனை சிதைக்கவில்லை
உன் வனப்பில்லாததால்
நான் நானாகவில்லை
உன் காதல் என்வசமில்லாததால்!!!
என் வாழ்வும் வாழ்க்கையும் நீயே
என் வாழ்வின் இன்பமும் நீயே
என் இமையின் இமைப்பும் நீயே
என் இதயத்தின் இசையும் நீயே
என் காதலின் கதையும் நீயே
என்னை காதல் செய்தவளும்
என்னவளே நீயே தானடி !!!
மறக்க தான் நினைக்கின்றேன்...
இருந்தும் உன் நினைவுகள் என்னை விடுவதாக இல்லை...
துரத்தி கொண்டே இருக்கின்றது என்னை விடாது...
உன்னை எண்ணி என்னை நினைக்கையில்...
விம்மி அழ முடியவில்லை...
ஏனெனில் பக்கத்தில் உறவுகள்...
பொத்திக்கொள்கிறேன் நெஞ்சை...
யாருக்கும் புரியவில்லை...
காதலின் வலி என்னவென்று...
காதலுக்கும் எனக்கும் நீண்ட இடைவெளி என்றும் தெரிந்தும்...
உன்னை இழக்க என் மனம் தயாராக இல்லை...
இருந்தும் ஏற்பதாக நானும் இல்லை...
யாரிடம் சொல்ல மன வேதனையை...
இது என்ன வாழ்க்கை என்று நாளும் நான் நடத்தும் போராட்டம்...
பதில் சொல்வார் யாரோ....?
இணைந்து விட்ட உயிர்கள் நாம்! இதுநமக்கு உடற்பிரிவே!!!என்னைப்புரிந்
த நீயே
எனக்கு
புதிராகிப்போனாய்......
எண்ணற்ற சிந்தனையை-மன
எண்ணத்தில் தீட்டி???உன் முகம் காணாத
ஏக்கத்தில் - ஊன் இன்றி!
உறக்கம் இன்றி! உயிரற்ற
நிலையில்... உருகிப் போய்
கிடக்கின்றேன்......! உன்னில் கரைந்துவிட!
என் இதயம் உன்னை பார்த்த போது தான் என் இதயம் காதல் உணர்வை அறிந்து கொண்டது உன்னோடு பேசிய போது தான் உன் நினைவுகளை என் இதயம் கவிதை வார்த்தைகளால் எழுதிக்கொண்டது......
நீ என் சொந்தமென்று தோன்றிய எண்ணங்கள் யாவும் அர்த்தம் இழக்கின்றன பல ஆண்டுகளாய் உள்நெஞ்சம் சேகரித்த எண்ணற்ற வார்த்தைகளுள் ஒன்று கூட உதவிக்கு வரவில்லை மொழியையும் மறந்து இமைக்கவும் மறந்து உன்னுடன் மௌனமாய் நடக்கிறேன் நீ என் கைகோர்த்து செல்லும் அந்த நாளை எண்ணியபடி!!
என் கண்கள் சிந்தியமழை பொய்யாய் போகுதடி நேற்று பெய்த மழையின் போது இடிமுழக்கம் அண்ணாந்து பார்த்தேன் ஒவ்வெரு தடவை மின்னல் வரும் போதும் உன்கண்ணில் என்னை விழுத்திய ஞாபகமே... !!!
அழகிய தீயே.....
பற்றிக்கொண்டுவிட்டாய்
இனி ஏன் பதறுகின்றாய்
பாதி கருக்கி
மீதி விட்டுவிடாதே
முழவதையும் அழித்துவிடு
எச்சம் உண்டெனில் அது
என்றும் உன்னையே எண்ணும்...